×

வடிகால் அடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் ஓடி சுகாதார கேடு

கரூர், மே 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் அருகே வடிகால் அடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் கலந்து பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து அருகம்பாளையம் வழியாக அரசு காலனி, வாங்கல் சாலை போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அருகம்பாளையம் பகுதியை ஒட்டி, சாலையோரம் செல்லும் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் கலந்து செல்கிறது.

சாலையில் கழிவு நீர் செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக இந்த பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அருகம்பாளையம் பகுதியில் நிலவி வரும் இந்த பிரச்னையை பார்வையிட்டு சீரமைப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோல நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனவே, சாலையோரம் கழிவு நீர் கலப்பதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வடிகால் அடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் ஓடி சுகாதார கேடு appeared first on Dinakaran.

Tags : Karur ,Arugambalayam ,Karur Corporation ,Wangapalayam ,Arukambalayam ,Government Colony ,Wangal Road ,Dinakaran ,
× RELATED கரூர் ரயில்வே நிலைய சாலை பகுதியில்...